Price: ₹150.00
(as of Jun 01, 2025 11:36:37 UTC – Details)
ஒரு சரித்திர நாவல் எழுதவேண்டும் என்று தீடீரென்று தோன்றி விட்டது. இருபதுக்கும் மேற்பட்ட பல நாவல்களை எழுதி அதை கிண்டிலில் வெளியிட்டதால், நானும் ஒரு பிரபல எழுத்தாளன் ஆகி விட்டதாக நினைத்துக் கொண்டேன். எனக்கு சரித்திர கதை எழுதும் தகுதி வந்து விட்டதாக நானே நினைத்துக் கொண்டேன். என் கதைகளை யாராவது வாசிக்கிறார்களா என்பதைப்பற்றி நிச்சியமாக தெரியவில்லை. பாராட்டி யாரும் தகவல் அனுப்பவில்லை. அதைப்போலவே நீயெல்லாம் கதை எழுத வந்து விட்டாயா என்று யாரும் கடிந்து கொள்ளவும் இல்லை.
சரித்திர கதை எழுதலாம் என்று நான் முடிவெடுத்ததும் என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும்தான் முதலில் சொன்னேன். அவர்கள் இருவருக்கும் தமிழ் படிக்க தெரியாது. ஆனால் மாப்பிள்ளை தரித்திர கதை ஆகிவிடப்போகிறது என்று எச்சரித்தார். அது விஷயத்தில் நான் எச்சரிக்கையாக இருந்தேன்.
எந்த கால சரித்திரம் என்று யோசித்து சோழர்களைப்பற்றிதானே எல்லோரும் எழுதி வருகிறார்கள், நாம் பாண்டியர் கதை எழுதலாமா என்று யோசித்தேன். சோழ சரித்திரத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் முடியும் வேளையான மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடுத்து பட்டம் ஏறிய மூன்றாம் ராஜராஜனின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக பட்டம் ஏற்ற மன்னர்களை புகழ்ந்து கூறுவதும் அவர்கள் நடத்திய போரில் வெற்றியடைந்ததை மிகைப்படுத்தி புகழ்ந்து அந்த மன்னர் ஈடு இணையற்று மிக்க புகழ் பெற்று வாழந்தார் என்று கூறுவதும்தான் வழக்கம். அப்படி அந்த மன்னர்காலத்தில் குறிப்பிடத்தக்க போர் எதுவும் இல்லை என்றால், அவர் அமைதியை விரும்பினார், அவர் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தார்கள் என்று சொல்லி விடுவார்கள். இதற்கு நேர்மாறாக மூன்றாம் ராஜராஜனைப்பற்றி சரித்திர ஆசிரியர்களே, முட்டாள் என்றும் கோழை என்றும் வர்ணித்து இருந்ததைக்கண்டு ஆச்சரியமானேன். இவனுடம் இல்லை அடுத்த பட்டம் ஏற்ற மூன்றாம் ராஜேந்திரனுடன் சோழ சாம்ராஜ்ஜியம் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் பல மன்னர்கள் சிறு சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தார்களாம். பெரும் புகழ் பெற்றவர்கள் யாரும் இல்லை. பாண்டியர்கள் எழுச்சி ஆரம்பமாகி இருந்தது. மூன்றாம் ராஜேந்திரன் காலத்திலேயே புகழ் பெற்ற பாண்டியன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் குறிப்பிடத்தக்கவன். ஆனால் பாண்டியர்கள் அதிக காலம் நீடிக்கவில்லை. முகம்மதியர்களுடன் உறவு பூண்டு அது வேறு சரித்திரம் ஆகி விட்டது. மதுரையை மாலீக்காபூர் வசம் இழந்தார்கள்.
நம் கதை மகேந்திர சோழன், மூன்றாம் ராஜேந்திரனுக்கு மகேந்திரன் என்பதுதானா இயற்பெயர், அதுவும் தெரியவில்லை. பல சரித்திர புத்தங்களைப் படித்தேன். முக்கியமாக நீலகண்ட சாஸ்திரியாரின் சோழர்கள் என்ற இரண்டு வால்யூம் புத்தகம் ரொம்ப விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திமும், இராஜமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் படித்தேன். இன்னும் சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறும் பல சங்கதிகளை தெரிவித்தது. Lords of the Deccan என்கிற நூல் அனிருத் கனி செட்டி எழுதியதும் பல விஷயங்களுக்கு பயனளித்தது.
பொதுவாக பல சங்கதிகள் கிடைத்தன. தரித்திர நாவலாக இருக்காது என்று நம்பலாம். பல சரித்திர சம்பவங்களை ஒன்று சேர்த்து சுவையான நாவலாக படைத்திருக்கிறேன்.
தவறுகள் இருக்கலாம், இருக்கும். நான் சரித்திரம் படித்தவனோ, தமிழ் பண்டிதனோ அல்ல. அதனால் சில தவறு நேரந்திருக்கலாம்.
ASIN : B0F5NK785J
Language : Tamil
File size : 1.1 MB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 539 pages